-->

வாழைத்தண்டு மோர் கூட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள் 

  1. வாழைத்தண்டு – 2  பொடியாக நறுக்கியது 
  2. கடுகு – ஒரு டீஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  4. தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் – ஒன்று
  6. மோர், தயிர் – சிறிதளவு
  7. உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  1. பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை நன்கு சுத்தம் செய்து  நார் நீக்கி எடுத்துக் கொள்ளவும் .
  2. பின்னர் சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய பின் வாழைத்தண்டை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு கடாயில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
  5. பின் அத்துடன்  தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும்
  6. பின் உப்பு சேர்த்து  சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். 
  7. ஆறியவுடன் சிறிது தயிர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தாண்டு  மோர்  கூட்டு ரெடி.
Previous Post Next Post