-->

ஆற்காடு தொடை கறி ரோஸ்ட் செய்வது எப்படி

மட்டன் தொடை கறி

தேவையான பொருட்கள்

  1. மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ
  2. வினிகர் - 1 ஸ்பூன்
  3. உப்பு - தேவையான அளவு
  4. எண்ணெய் - தேவையான அளவு
  5. மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
 செய்முறை
  1. முதலில் ஆட்டுக் கறியில் தொடையை பகுதியை வாங்கவும்.
  2. பின்னர் அதை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு கறியில் உப்பு, மிளகுத் தூள், வினிகர், மஞ்சள் தூள்,சிறிதளவு எண்ணெய்  சேர்த்து ஒன்றாகக் கலந்து கிளறி வைக்கவும்.
  4. இப்பொழுது கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்திக் கட்டையால் தட்டி சதுரமாகப் பரப்பவும்.
  5. பின்னர் கறித்துண்டுகளை எடுத்து மிளகு தூளில் பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
  6. இப்பொழுது மிளகு தூளில் பிரட்டி வைத்துள்ள கறியை ஓவனில் வைத்து எடுக்கவும்.
  7. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் இறக்கி பரிமாறினால் சுவையான ஆற்காடு தொடை கறி ரோஸ்ட்  ரெடி.

Previous Post Next Post