-->

திணை பனியாரம் செய்வது எப்படி

திணை பனியாரம் செய்வது எப்படி

திணையில் நம் உடலுக்கு தேவையான புரத சத்துக்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

தேவையான பொருட்கள்
  1. திணை அரிசி – ½ கப்
  2. கம்பு – ¼ கப்
  3. இட்லி அரிசி – ¼ கப்
  4. உளுந்து  - ¼ கப்
  5. பெருங்காயம் – 1 சிட்டிகை
  6. பச்சை மிளகாய் - 2  
  7. கொத்தமல்லி தழை – சிறிதளவு 
  8. வெந்தயம் – ¼ ஸ்பூன்
  9. கடுகு 1 ஸ்பூன்   
  10. கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்   
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. நெய் – சிறிதளவு   
  13. சீரகம் – 2 ஸ்பூன்   

செய்முறை
  1. முதலில் திணை அரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஊறவைத்த அனைத்தையும் அரைத்து சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்க வைக்கவும்..
  3. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து மாவில் கலக்கவும்.
  4. பின்னர் பணியாரச் சட்டியில் நெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை பணியாற குழியில் ஊற்றவும்.
  5. பின் இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நெய் ஊற்றி எடுத்து பரிமாறினால் சுவையான கம்பு திணை பனியாரம் ரெடி.

Previous Post Next Post