-->

செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி


காரசாரமான செட்டிநாடு உணவு வகைகள்

காளான் உணவு வகைகளை சாப்பிடுவதின் மூலம் நம் உடலில் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்பட்டு உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்
  1. காளான் – 1/2 கிலோ
  2. பிரியாணி அரிசி – 2 கப்
  3. வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
  4. தக்காளி – 2 (நீளமாக நறுக்கியது)
  5. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி – சிறிதளவு
  7. புதினா – சிறிதளவு
  8. பச்சை மிளகாய் – 3 ( நீளமாக நறுக்கியது)
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. நெய் – தேவைகேற்ப
  11. தேங்காய் பால் – 1/2 கப்
  12. தயிர் – 2 ஸ்பூன்
  13. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  14. மல்லி தூள் – 2 ஸ்பூன்
  15. சோம்பு தூள் – 1/2 ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  17. தண்ணீர் – 3 கப்
  18. உப்பு – தேவையான அளவு

தாளிக்க
  1. பிரியாணி இலை – 1
  2. ஏலக்காய் – 3
  3. இலவங்கம் – 2
  4. கிராம்பு – 5

செய்முறை
  1. முதலில் காளானை சுத்தம் செய்து கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் தேவையான அளவு பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3.  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து  தாளிக்க வேண்டும்.
  4. பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  5. பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும்.
  6. பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும், காளானை சேர்த்து பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.
  8. பின்னர் அதில் தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  9. அதே சமயம், குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி வைத்து,அத்துடன்  அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் சேர்த்து  குக்கரை மூடி வைக்கவும்.
  10. 3 விசில் வந்தவுடன் இறக்கி சிறிதளவு நெய் சேர்த்து பரிமாறினால் சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி!!!

Previous Post Next Post