-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - சிம்மம்


குரு பெயர்ச்சி சிம்ம ராசி


சாதுர்யமான குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே !

உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும், திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது உண்மையில் உங்களுக்கு ஒரு மிக அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களது பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கூட கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்களில் சிலர் கையெழுத்திடுவீர்கள். எதிர்காலத்தில் அது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது நாள் வரையில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மறைமுக எதிர்ப்புகள் கூட விலகும்.

குரு பெயர்ச்சி சிம்ம ராசி 2019


உத்தியோகஸ்தர்களுக்கு இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சாதகமான பலனை தரும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் கூட நல்ல திருப்பத்தை தரும். புத்திர வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் அனைத்தும் நல்ல படியாக நடந்தேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கொடுக்கல் - வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு கொடுத்த கடன் கூட வசூல் ஆகும். குடும்பத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் படிப்படியாகக் குறையும். உங்களுக்கு இன்னொரு நல்ல திருப்பு முனையை 24.1.20 இல் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சி தரும். சனி பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு செல்ல இருக்கிறார். இது உங்களுக்குப் பல விதங்களில் நன்மையை தரும். வழக்குகள் கூட உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் இனி வரும் காலம் பொற்காலமாக இருக்கும்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக அகலும். புத்திர வழியில் கூட மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். உற்றார் - உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சி தரும். கொடுக்கல் - வாங்கலில் சரளமான நிலை காணப்படும். பொன் ,பொருள் சேரும். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நல்ல படியாக நடந்தேறும். திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் இது உங்களுக்கு மிக அற்புதமான நேரம் எனலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாகவே இருக்கும். திடீர் என்று வாழ்க்கையில் ஒரு பிடிப்பு பற்றுதல் உண்டாகும். இதனால் செய்யும் பணிகளை திருப்தி உடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கிவர்கள் ஆதரவு கூட புத்துணர்ச்சி தரும். முயற்சிகளில் வெற்றிகள் உண்டு. பயணங்களால் நல்ல அனுகூலம் உண்டாகும். மொத்தத்தில் பெரும்பாலும் அனைத்து வகையிலும் நன்மை தான் ஏற்படும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

குடும்பத்தில் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாகத் தான் இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்துமே பெரும்பாலும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். சிலர் தெய்வ தரிசனங்களுக்கான பயணங்களை கூட மேற்கொள்ளலாம். சிலர் வேலையை விட்டு விட்டு, புதிதாக தொழில் தொடங்குவதை பற்றி யோசித்து செயல்படுத்துவார்கள். அனைவருக்குமே பெரும்பாலும் நல்ல திருப்பு முனையை தரும் விதத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி காணப்படுகிறது.

தொழில், வியாபாரம்:

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல் - வாங்கல் சரளமாக இருந்து வரும். சிலருக்கு கொடுத்த கடன் கூட வசூல் ஆகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கூட கிடைக்கப்பெறும். இதனால் சிலருக்குப் பல காரியங்கள் சுலபமாக முடியும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். மற்றபடி தொழில், வியாபாரம் ரீதியாக உள்ள நெருக்கடிகள் ஒரு முடிவுக்கு வரும். அரசு வழியில் ஆதரவு தேடி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்பு உள்ள வியாபாரம் செய்பவர்களுக்கு கூட நல்ல நன்மைகள் வந்து சேரும். குறிப்பாக கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். புதிய ஒப்பந்தங்கள் கூட கையெழுத்தாகும். இப்படியாக அனைத்து வகையிலும் நன்மைகள் மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனி வரும் நாட்களில் வேலை பளு படிப்படியாகக் குறைந்து இது நாள் வரையில் செய்த வேலைக்கான நல்ல பலன் கிடைக்கப்பெறும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு மாற்றம் போன்ற இவை அனைத்துமே இந்தக் காலத்தில் ஏற்படும். உயர் அதிகாரிகள் பாராட்டு கூட உங்களுக்கு நல்ல விதத்தில் மகிழ்ச்சி தரும். வெளியூர், வெளிநாடு செல்ல இருப்பவர்கள் எண்ணம் ஈடேறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைவருக்கும் நன்மையை தரும் விதமாகவே இருக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சமூகத்தில் உங்களது பெயர், புகழ் உயரும். உடன் இருப்பவர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் கூட இனி வரும் காலங்களில் குறையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் கூட அதற்கான நன்மைகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கப்பெறும். மறைமுக வருவாய் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று வரும் படியாக இருக்கும்.

விவசாயம் செய்பவர்கள்:

விளைச்சல் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக இருக்கும். புதிய நவீன கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் உற்பத்தியை பெருக்குவீர்கள். கடன்கள் கூட சிலருக்கு நல்ல படியாக அடையும். கால் நடைகள் வளர்ப்பர்வர்கள் கூட சென்ற ஆண்டு போல அல்லாமல் இனி வரும் ஆண்டில் லாபங்களையும் பார்ப்பீர்கள். மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி சகல விதங்களிலும் உங்களுக்கு வெற்றியைத் தான் தரும்.

மாணவ - மாணவியர்:

மாணவ - மாணவியர் இனி வரும் காலங்களில் பாடங்களை எளிதாகப் புரிந்து படிப்பார்கள். ஞாபக சக்தி வளரும். முயற்சிகள் அனைத்துமே நல்ல விதங்களில் நடந்தேறும். நல்ல நட்பு கூட கிடைக்கப்பெறும். அதிலும் குறிப்பாக மோசமான நண்பர்களை இனம் கண்டு இனி நீங்களே ஒதுங்குவீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வீர்கள். அத்துடன் பெற்றோர், ஆசிரியர் ஆதரவு கூட உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மொத்தத்தில் அனைத்து விதங்களிலும் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை தான் செய்யும்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் முயற்சிகள் அனைத்துமே நல்ல படியாக நடந்தேறும். பணவரவு சிறப்பாக இருக்கும். இதனால் உங்களது தேவைகள் நல்ல விதத்தில் நிறைவேறும். சமூகத்தில் அதிகம் மதிக்கப்படுவீர்கள். செல்லும் இடங்கள் எல்லாம் பெரும்பாலும் நீங்கள் சிறப்பைப் பெறுவீர்கள். திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் சீராகும். உற்றார்- உறவினர்கள் உதவி கிடைக்க இனிமையான வார்த்தைகளை பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சரி கட்டி எதிர்பார்க்கும் லாபத்தை இறுதியில் நீங்கள் பெற்று விடுவீர்கள். அதேபோல, கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகள் ஒத்துழைப்பும் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கும் கூட ஏற்றங்கள் இனி உண்டு. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். அரசு வழியில் கூட படிக்க உதவிகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மையான காலமாக இந்தக் காலம் இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

இக்காலத்தில் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாகத் தான் இருக்கும். நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். நவீன மற்றும் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக நடந்தேறும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனப்போர் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். 24.1.20 இல் ஏற்பட இருக்கும் சனிப்பெயர்ச்சி கூட உங்களுக்கு லாபம் தரும் விதத்தில் தான் அமைந்து உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புடைய வியாபாரங்களை செய்பவர்கள் மேன்மை அடைவார்கள். உத்யோகஸ்தர்கள் திறம்பட செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் உதவிகள் நல்ல விதமாகக் கிடைக்கப்பெறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்வியில் சிறப்புடன் இருப்பார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

அனைத்து கிரகங்களுமே பெரும்பாலும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதாரம் நல்ல விதத்தில் இருந்து வரும். இதனால் உங்களது குடும்ப தேவைகள் அனைத்துமே நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். தொழில், வியாபாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த தேக்க நிலை விலகும். போட்டிகள் அகலும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சகவாசம் மகிழ்ச்சி தரும். உத்யோகஸ்தர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்துமே நல்ல முறையில் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அகலும். திருமணம் போன்ற சுப காரியங்கள் அனைத்துமே சாதகமான பலனை தரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்க்கையில் சிறப்படைவார்கள். பெண்கள் ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றம் தரும் காலமாக இந்தக் காலம் இருக்கும். மாபெரும் வெற்றிகளை எல்லாம் அடைவீர்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

இந்தக் காலத்தில் குரு பகவான் சாதகம் இல்லாமல் இருந்தாலும் கூட சனி பகவான் சாதகமாக இருக்கிறார். குரு பகவான் சாதகம் இல்லாமல் இருக்கக் காரணம் அவர் அதி சாரமாக 6 ஆம் இடத்தில் இருப்பதே! இதனால் கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எனினும் குடும்ப ஒற்றுமைக்குப் பெரிய அளவில் பங்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால் பயப்பட வேண்டாம். வீண் வாக்கு வாதங்களுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாதத்தில் திடீர் என்று மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு திடீர் என்று புதிய பொறுப்புகள் தேடி வரும். எனினும் அதற்கான ஆதாயமும் கிடைக்கப்பெறும். ஆனால், எப்படிப் பார்த்தாலும் இந்தக் காலத்தில் வேலை பளு தவிர்க்க முடியாது தான். கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை தான் காணப்படும். எனினும், அதனை சமாளித்து இறுதியில் வெற்றி அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை அவசியம் குறைக்க வேண்டிய காலம் இது. மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. மேற்கண்ட தீய பலன்களை குறைக்க வியாழக்கிழமையில் குலதெய்வத்தை மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். இப்படியாகச் செய்வதால் நன்மைகள் பெருமளவில் மேலோங்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

இந்தக் காலத்தில் குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்வதால் திடீர் என்று பொருளாதார நிலையில் ஒரு வெற்றிடம் அல்லது தேக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் பெரிய முதலீடுகளை இந்தக் காலத்தில் செய்ய திட்டமிடுவது பற்றி யோசித்துக் கொள்ளுங்கள். எனினும், 11 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் மனதைரியத்தை அதிகப்படுத்துவார். உடல் ஆரோக்கியத்தில் சிலருக்கு தொய்வு நிலை வந்து போகலாம். அது காரணமாக சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதம் ஆகலாம். எனினும் உங்களது அலுவலகத்தில் நீங்கள் எப்போதும் போல நல்ல விதத்தில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் நல்ல முறையில் கிடைக்கப்பெறும்.
மொத்தத்தில் உங்களது திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கப்பெறும். எனினும், தொழில் - வியாபாரம் செய்பவர்கள் நிலை அதிக போட்டிகளை சந்தித்தே வெற்றி பெரும்படியாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் அதிகம் யோசித்து செய்யுங்கள். மாணவர்கள் வகையில் பெற்றோர் - ஆசிரியர்கள் உங்களை இனி வரும் நாட்களில் புரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் அனைத்துத் தரப்பினருமே எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவார்கள். எனினும், இந்தக் காலத்தில் சாதனைக்கு இடம் இல்லாமல் இல்லை. உங்கள் முயற்சியால் சாதிப்பீர்கள். இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

குரு வக்கிர நிவர்த்தி அடைந்து நல்ல விதத்தில் சஞ்சரிப்பதாலும், அதே போல சனி மற்றும் ராகு கூட நல்ல விதத்தில் காணப்படுவதாலும் பெரும்பாலும் நன்மையான பலன்கள் தான் இந்தக் காலத்தில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி இடையே மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மற்றபடி, திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல விதத்தில் திருமணம் கைகூடும். திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். மறுபக்கம் உற்றார் - உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சி தரும். தொழில், வியாபார ரீதியாக நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்துமே நல்ல விதத்தில் வெற்றி அடையும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கூட இந்தக் காலத்தில் கிடைக்கப்பெறும். மாணவர்களின் சிந்தனை மற்றும் கல்வித்திறம் நல்ல விதங்களில் வளர்ச்சி அடையும். மாணவர்கள் புதிதான விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மொத்தத்தில் ராகு/ கேதுக்ககளால் சில விஷயங்களில் அலைச்சல் அல்லது தாமதம் ஏற்பட்டாலும் கூட இறுதியில் மாபெரும் வெற்றியை பெறுவீர்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களது முயற்சிக்கு தக்க நல்ல பலன் கண்டிப்பாகக் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் சிலருக்கு மேம்படும். இதனால் மருத்துவ செலவு பெருமளவில் குறையும். அன்றாட பணிகளில் கூட நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கூட தடையின்றி கிடைக்கப்பெறும். குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். கௌரவமான பதவிகள் சிலரைத் தேடி வரும். தொழில், வியாபாரம் கூட சிறப்படையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணி ரீதியாக நல்ல திருப்பங்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்ல விதத்தில் நடந்தேறும். குடும்பத்தில் மங்கள செலவுகள் ஏற்படும். மாணவர்கள் சின்னச் சின்ன தடைகளை சந்தித்தாலும் கூட இறுதியில் நன்மைகளை பெறுவீர்கள். எனினும் கொஞ்சம் போராடிப் படித்து முன்னேற வேண்டிய நிலை இருக்கும்.கேதுவின் சஞ்சாரம் சாதகமாக இல்லாத காரணத்தால் தேவை இல்லாத நட்பை விட்டொழிப்பது நல்லது.

பரிகாரம்:

கேது மட்டுமே உங்களுக்கு சாதகம் இல்லாமல் இருக்கிறார். இதனால் தினமுமே விநாயகரை அருகம் புல் சாற்றி வழிபட்டு வாருங்கள். பிள்ளையாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உடல் ஒத்துழைத்தால் சதுர்த்தி விரதம் இருப்பது கூட உங்களுக்கு அதிக அளவில் நன்மையை தரும்.

வணங்க வேண்டிய தெய்வம் : சிவபெருமான்

ராசியான திசை : கிழக்கு

ராசிக்கல் : மாணிக்கம்

ராசியான கிழமை : ஞாயிறு மற்றும் செவ்வாய்

ராசியான நிறம் : நல்ல சிவப்பு

ராசியான எண்கள் : 1,2,3,9

Previous Post Next Post