-->

குழந்தையின் திருஷ்டியை போக்கும் வழிமுறைகள்


உங்கள் குழந்தைக்கு அதிக திருஷ்டியா?

நல்ல இருந்த குழந்தை சரியாக சாப்பிட மாட்டேங்குது, தூங்க மாட்டேங்குது, விளையாட மாட்டேங்குது, பயப்படுது, அடிக்கடி சோர்ந்து பொய் படுத்துக்குது என பெற்றோர்கள் அதிகமாக கவலைப்படுவது உண்டு. நன்றாக ஓடியாடி விளையாடிய குழந்தை இப்படி சோர்ந்து போவது பெற்றோருக்கு கவலை தரும் விஷயம் தான். இதற்க்கு உடல் ரீதியாக பிரச்சனை இருந்தாலும் நம் பெரியோர்கள் இதற்க்கு தீர்வாக சொல்வது திருஷ்டியால் தான் இப்படி ஆனது. திருஷ்டி சுற்றி போடுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்பார்கள்.

திருஷ்டி கழிக்கும் வழிகள்

திருஷ்டி கழிக்கும் முறைகள்

கல்லடி பட்டலும் படலாம், ஆனால் கண்ணடி படகூடாது என்பார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அந்த முறைகள் பின்வருமாறு,

1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய் மடியில் குழந்தையை இருத்தி, இடமிருந்து வலமாக மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போடுதல் வேண்டும். தண்ணீரில் உப்புக் கரையக், கரைய திருஷ்டியும் கரைந்து குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும். இந்த முறை பல கிராமங்களில் இன்றும் பின்பற்றப்படுகிறது.

2. குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சரியாக சாப்பிடாது. அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்பத்தின் குச்சியை எரித்து திருஷ்டி சுத்தி போடுவார்கள்.

3. திருஷ்டியால் குழந்தைக்கு, கீழே விழுந்து அடிபட்டால், குழந்தை கீழே விழும் நேரத்தில் நீங்கள் அங்கிருந்தால் கீழே கிடக்கும் செங்கல்துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி தூக்கிப் போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம்.

4. கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு, சோறு ஊட்டிய பின்னர் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றிப் போடலாம். சாப்பிடப் போகும் முன், ஒரு உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் திருஷ்டி கழிக்கும் ஒரு பரிகாரமே.

5. சில வீடுகளில் கடுகு, மிளகாய், உப்பு சிறிது மண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்கார வைத்து," ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும்!" என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள். இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரம் தான்.

இப்படியாகக் குழந்தைகளுக்குப் பல வகையில் திருஷ்டி சுற்றிப் போடலாம்.

திருஷ்டியில் இருந்து தப்பிக்க


திருஷ்டி கழிக்கும்போது செய்யக்கூடாதது

சாஸ்திரங்களின்படி தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது என்பது மகா பாவம். அதை மட்டும் செய்யாதீர்கள். அப்படியாகச் செய்யும் பட்சத்தில், அது எதிர்மறை விளைவுகளைக் ஏற்படுத்தலாம். தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றினால் ஆயுள் குறையும் என்று கூட சொல்லப்படுகிறது. அதாவது அது திருஷ்டி சுற்றும் நோக்கத்தையே பாதிப்படையச் செய்யும். அத்துடன் எதிர்மறை விளைவுகளையும் தர வல்லது. திருஷ்டி சுற்றுவது மட்டும் அல்ல, குளிக்க ஊற்றுவது, அலங்காரம் செய்து அழகு பார்ப்பது என எல்லாமே குழந்தை விழித்திருக்கும் நிலையில் தான் செய்தல் வேண்டும்.

எனினும், குழந்தைக்கு கருப்பு திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். இது எல்லோராலும் செய்யக் கூடியதே. அது அனுபவத்தில் அதிக அளவில் பயன் தரும் விஷயமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியைப் கழிக்கும்.
 

Previous Post Next Post