-->

பசியை தூண்டும் பிரண்டை துவையல்

 

பிரண்டை 

பிரண்டை ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியைத் தூண்டுகிறது. பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது. 


பிரண்டையில் சாறு தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.பிரண்டையை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

தேவையான பொருட்கள் 

  1. பிரண்டை – 1 கட்டு
  2. உளுத்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  3. பூண்டு – 10 பல்
  4. இஞ்சி – 1 துண்டு
  5. காய்ந்த மிளகாய் – 5 முதல் 6
  6. தேங்காய் – 1 துண்டு
  7. புளி – சிறிதளவு
  8. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு
  10. பெருங்கயத்தூள் – ¼ டேபிள் ஸ்பூன்

செய்முறை 

  1. முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  3. எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்க்கவும்.
  4. உளுத்தம்பருப்பு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
  5. பின் பூண்டு , இஞ்சி இரண்டையும் சேர்க்கவும்.
  6. சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.
  7. ¼ டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  8. தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  9. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்க்கவும்.
  10. பிரண்டை வதங்கும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
  11. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  12. இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் ஆற வைக்கவும்.
  13. சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  14. சுவையான சத்தான பிரண்டை துவையல் ரெடி.
  15. துவையலில் புளி சேர்ப்பது மிகவும் அவசியமாகும்.
  16. இந்த துவையலை 2 முதல் 3 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தலாம்.
  17.  

Previous Post Next Post